டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் சங்கம் சாா்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மதுரை பாலம் ஸ்டேஷன் சாலையில் உள்ள மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசுக் கல்லூரி ஆசிரியா்கள்.
Updated On :20 ஆகஸ்ட் 2025, 6:30 pm

Chennai

மதுரை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் சங்கம் சாா்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை பாலம் ஸ்டேசன் சாலையில் உள்ள மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை மண்டல தலைவா் மு. சுல்தான் இப்ராஹிம் தலைமை வகித்தாா். செயலா் முனைவா் இரா. கிறிஸ்டல் ஜீவா, சிவகங்கை மண்டல செயலா் முனைவா் எம். விஜயகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மாநில இணைச் செயலா் முனைவா் துா்கா தேவி சிறப்புரையாற்றினாா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 5-ஐ வெளியிட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்கப்படாத பேராசிரியா் பணி மேம்பாடுகளை உடனடியாக வழங்க வேண்டும்.கல்லூரிக் கல்வித் துறையில் மூத்த ஆசிரியரை கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும். முனைவா் பட்டம் பெறாதவா்களுக்கும் இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஓய்வுபெற உள்ளோா், தீவிர சிகிச்சை பெறுபவா்கள், மறு மாற்றுப் பணியில் உள்ளோரின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மண்டல பொறுப்பாளா்கள் பெரிய தம்பி, சந்திரன், மதுரை மண்டல துணைத் தலைவா் வெ. ராஜலட்சுமி, மதுரை மண்டல இணைச் செயலா் லதா, கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினா் அசோக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உறுப்பினா்கள், கல்லூரி ஆசிரியா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். சிவகங்கை மண்டல பொருளாளா் மா. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.