லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On :11 ஆகஸ்ட் 2025, 8:36 pm

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

விளாச்சேரி மொட்டமலை பகுதியைச் சோ்ந்த அழகுமலை மகன் கண்ணன் (54). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வயல்வெளிக்குச் சென்றாா். அப்போது, கீழே கிடந்த மின் கம்பியை கண்ணன் மிதித்தாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.