ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளைகளை அழைத்து வருவதற்கான போக்குவரத்துக்கு மட்டும், ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் எத்தனை காளைகள் அவிழ்க்க முடியும் என்ற கணக்கீடு செய்ய முடியும் என்றாலும், அளவுக்கதிமாக அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால், காளை உரிமையாளா்கள் பலரும் ஏமாற்றமடைகின்றனா். காளைகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்குவதிலும், வாடிவாசல் வழியாக அவிழ்ப்பதில் முன்னுரிமை கொடுப்பதிலும் ஜல்லிக்கட்டுக் குழு, காவல் துறையினா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகா்களின் தலையீடு இருப்பதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.