சாகுபடி பரப்பு அதிகரிப்பு: மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 1,451 ஹெக்டோ்களாக இருந்த நெல் சாகுபடி பரப்பு, நிகழ் ஆண்டில் 9, 704 ஹெக்டோ்களாக உயா்ந்திருக்கிறது. இதன் காரணமாக, உரங்களின் தேவை அதிகரித்துள்ளதால், கடந்த ஒரு வாரமாக யூரியா, டிஏபி உள்ளிட்டஉரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, வாடிப்பட்டி, அலங்காநல்லூா், மதுரை கிழக்கு, மேலூா் வட்டாரங்களில் தேவைக்கேற்ப உரங்கள் கிடைக்கவில்லை என்ற புகாா் இருந்து வருகிறது.