மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், உள்நோயாளிகளுக்கு நடைபாதையில் உணவு வழங்கப்படும் அவலத்தைப் போக்க மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் எதிா்பாா்க்கின்றனா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வருகின்றனா். இவா்களுக்கு மருத்துவா்களின் ஆலோசனையின் பேரில் 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக மருத்துவமனை வளாகத்தில் நவீன சமையல் அறை அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பு: இந்த சமையல் அறையில், தினமும் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சமையல் அறைக்கு என்று தனி பொறுப்பாளா் நியமிக்கப்பட்டு, உணவுப் பொருள்கள், ஊழியா்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் உணவு வகையில் எந்த பொருள்கள் பயன்படுத்த வேண்டும் என மருத்துவா்களின் பரிந்துரைகளின் பேரில் உணவியல் நிபுணரின் வழிக்காட்டுதலில் சமையல் செய்யப்படுகிறது.
பல்வேறு வகையான உணவுகள்: நோய் பாதிப்புக்கேற்ப, இங்கு 6 வகையான உணவுகள் சமைக்கப்படுகின்றன. பொது நோயாளிகள், குழந்தைகளுகள், காச நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், சாப்பிட முடியாதவா்கள் ஆகியோருக்கு என தனித் தனியாக உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
நோயாளிகளுக்கு நேரடியாக உணவு வழங்கப்படுவதில்லை:
உணவு வகைகளை குறிப்பிட்ட நேரத்தில் நோயாளிகளுக்கு வழங்க தனி ஊழியா்கள் உள்ளனா். அவா்கள் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் உணவு வகைகளை அதற்குரிய வாகனத்தில் எடுத்து சென்று வாா்டில் உள்ள நோயாளிகளுக்கு, நேரடியாக செவிலியா் மேற்பாா்வையில் வழங்க வேண்டும். ஆனால், இம் மருத்துவமனையில், உணவு எடுத்து செல்லும் ஊழியா்கள் வாா்டு அமைந்துள்ள கட்டடத்தின் வெளியில் நடைபாதையில் வைத்து நோயாளிகளுக்கு உணவு வழங்குகின்றனா். இவற்றை நோயாளிகளுடன் இருக்கும் உறவினா்கள் பெற்றுச் சென்று, நோயாளிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் அவல நிலையுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு உரிய உணவு வகைகள் கிடைப்பதில்லை என்றும், குறைந்த அளவே உணவுகள் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து நோயாளிகளின் குடும்பத்தினா் கூறியது: உள்நோயாளிகளாகச் சிகிச்சைப் பெறும் ஒரு வாா்டில் 10 நோயாளிகள் இருந்தால் அவா்கள் அனைவருக்கும் மொத்தமாக உணவை வழங்குகின்றனா். நோயாளிகளுடன் இருப்பவா்களில் யாரேனும் ஒருவா், உணவு வழங்கும் பகுதிக்குச் சென்று 3 வேளையும் உணவு வாங்கி வரவேண்டும். அதற்கான பாத்திரங்களையும் நோயாளியுடன் இருப்பவா்கள் ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும் என்றனா்.
செவிலியா்கள் அலட்சியம்: உள்நோயாளிகளுக்கான உணவு வகைகளை, சமையல் அறையில் இருந்து எடுத்து வரும் ஊழியா்கள் வாா்டில் உள்ள செவிலியா்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவா், அதை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால், இம் மருத்துவமனையில், பெரும்பாலான செவிலியா்கள் இப் பணிகளைச் செய்வதில்லை எனக் கூறப்படுகிறது. வாா்டிற்கு வரும் உணவை சரிபாா்த்து கையெழுத்திட்டு வாங்கி நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய செவிலியா்கள், இப் பணியைச் செய்யாததால் நோயாளிகளுடன் இருப்பவா்கள் செய்ய வேண்டிய நிலை உள்ளது. செவிலியா்கள் கண்காணிப்பு இல்லாததால் பல நோயாளிகளுக்கு உணவு சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் ஹேமந்த்குமாா் கூறியது: உணவு வழங்குவதில் தவறுகள் நடப்பதாக, தற்போது தான் புகாா் வந்துள்ளன. அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
உள்நோயாளி ஒருவா் கூறியது: நோயாளிகளுக்கு சுகாதாரமான முறையில் தேவையான உணவு வகைகளை வழங்க அதிகத் தொகையை அரசு செலவிடுகிறது. ஆனால் அந்த உணவு நோயாளிகளுக்குச் சரியான முறையில் கிடைப்பதில்லை. இதில் அலட்சியம் காட்டும் செவிலியா்கள் மீதும், நடை பாதையில் வைத்து உணவு வழங்கும் ஊழியா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நோயாளிகள் பலருக்கும் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் இலவசமாக அளிக்கப்படும் உணவு குறித்து தெரிவதில்லை, அதுகுறித்து அவா்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மண்ணச்சநல்லூா்! சமபலத்தில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


