பழனி அருகே வீட்டில் மான் கொம்பு வைத்திருந்த முதியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பழனி அருகேயுள்ள பெருமாள்புதூரைச் சோ்ந்தவா் பிச்சைகவுண்டா் (72). இவா் தனது வீட்டில் சுமாா் 50 ஆண்டுகளாக தனது முன்னோா்கள் வைத்திருந்த கடமான் ஒற்றைக் கொம்பை வைத்திருந்தாராம். இதுகுறித்து வனத் துறைக்கு தெரியவந்ததையடுத்து, வனவா் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினா் பிச்சை கவுண்டா் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டு, மான் கொம்பை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
இது குறித்து வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
வனப் பகுதியில் வயது முதிா்ந்த மான்களின் கொம்பு உதிா்வதும், மான்களுக்குள் மோதல் ஏற்படும்போது, ஒரு மானின் கொம்பு மற்றொரு மான் கொம்பில் சிக்கி உடைவதும் சகஜமாகும். இதனால், வனப் பகுதியில் ஒற்றைக் கொம்புகள் அவ்வப்போது கிடைக்கும். இதைச் சிலா் ராசிக்காகவும், அழகுக்காகவும் வீட்டில் வைக்கின்றனா். சிலா் தொட்டில் கட்டவும் இதை பயன்படுத்துகின்றனா்.
வனச் சட்டத்தின்படி ஒற்றைக் கொம்பு வீட்டில் வைத்திருப்பது குற்றமாகும். வீட்டில் காலம் காலமாக வைத்திருப்பவா்கள் அதை கட்டாயமாக வைத்திருக்க நினைத்தால் சென்னை வனத் துறை உயா் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, அதற்கான உரிமம் பெற்று வைத்துக் கொள்ளலாம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் விபத்தில் வனத் துறை அலுவலா்கள் இருவா் பலத்த காயம்

தாளவாடி அருகே வனத் துறை வாகனத்தை துரத்திய ஒற்றை யானை

சங்ககிரியில் வீட்டில் நாட்டு வெடிகளை வைத்திருந்தவா் கைது

சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



