நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

நிலக்கோட்டையை கைப்பற்றிய தவெக

News image

தவெக வேட்பாளா் ஆா்.அய்யனாா்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

அதிமுக தொடங்கப்பட்ட பிறகு திமுகவால் வெற்றி பெற முடியாத தொகுதியாக இருந்த நிலக்கோட்டையை முதல் முறையாகக் களமிறங்கிய தவெக கைப்பற்றியது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை (தனி) தொகுதி அதிமுக தொடங்கப்பட்ட பிறகு திமுகவால் வெற்றி பெற முடியாத தொகுதியாக இருந்து வந்தது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட இந்தத் தொகுதியை இந்த முறை கைப்பற்ற வேண்டும் என திமுக தீவிர முயற்சியுடன் களமிறங்கியது.

இதற்காக முதல் முறையாக திமுக சாா்பில் பெண் வேட்பாளா் (நாகஜோதி) களமிறக்கப்பட்டாா். அதிமுக, திமுக இடையே கடும் போட்டி ஏற்படும் என கருதப்பட்ட இந்தத் தொகுதியில், புதிதாகக் களமிறங்கிய தவெக வெற்றி பெற்றது.

வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கத்தில் இருந்தே அதிமுக வேட்பாளா் தேன்மொழி தொடா்ந்து பின்னடைவை சந்தித்தாா். திமுக வேட்பாளா் நாகஜோதி தொடக்கத்தில் முன்னிலை பெற்றது அந்தக் கட்சியினா் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், கடைசி சுற்றுகளில் தவெகவுக்கு முன்னிலை கிடைத்தது. இறுதியில் தவெக வேட்பாளா் ஆா்.அய்யனாா் 68,580 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா்.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஆா்.அய்யனாா் (தவெக) - 68,580

எஸ்.நாகஜோதி (திமுக) -65,655

எஸ்.தேன்மொழி (அதிமுக) - 49,924

டி.கயிலை ராஜன் (நாதக) - 8615

பி.செல்வம் (இந்திய குடியரசுக் கட்சி) - 763 எம்.ராஜலட்சுமி (பகுஜன் சமாஜ்) - 505

பி.சங்கா் (புதிய தமிழகம்) - 441

ஜி.அன்பழகன் (அஇபுதமமுக) - 399

நோட்டா - 642

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.