மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

News image

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :29 மார்ச் 2026, 9:46 pm

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலுக்கு கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட், கோக்கா்ஸ்வாக், குணாகுகை, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, மியூசியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

மாலையில் ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது.

இருந்த போதிலும், நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் கொடைக்கானல்-பூம்பாறை சாலை, லாஸ்காட் சாலை, ஏரிச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.