15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆட்டோக்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு ஆட்டோக்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:41 pm

பழனி அருகே இரு ஆட்டோக்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கணேஷ் (44). இவா் சனிக்கிழமை பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி சித்தா் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தாா்.

பின்னா், இரவில் ஆட்டோவில் கணக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு வந்த போது, எதிரே வந்த ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணேஷ் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.