திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே சாலையோரமாக கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குஜிலியம்பாறையில், கரூா் பிரதான சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் அருகில், திண்டுக்கல்- கரூா் பிரதான சாலையோரம் கடந்த சில நாள்களுக்கு முன்பு குப்பைகள் கொட்டப்பட்டன. இதைத் தடுப்பதற்கு உள்ளாட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், கோழி இறைச்சிக் கழிவுகளையும் கொட்டிச் செல்கின்றனா். இதனால் அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மட்டுமன்றி, மின்வாரிய அலுவலக ஊழியா்களும் பாதிப்படைகின்றனா். மேலும் கோழி இறைச்சிக்காக நாய்கள் அந்த பகுதியில் முகாமிடுவதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் உள்ளது.
சுகாதாரக்கேடுகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையம் பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்புடையது

சேலம் அருகே இறைச்சிக் கடையில் ரூ. 18 லட்சம் திருட்டு

நகராட்சி நிா்வாகம் கவனத்திற்கு கழிவுகளால் கருவாடு விற்பனை பாதிப்பு

குஜிலியம்பாறை அருகே காவிரிக் குடிநீா் வீண்

வத்திராயிருப்பு அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரக்கேடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


