பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பழைய ஆயக்குடியில் பயணிகள் நிற்க நிழல்குடை இல்லாத நிலையில், இதை கவனப்படுத்தும் விதமாக கிழிந்த குடைகளுடன் பயணிகள் நிழல்குடை என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆங்காங்கே அரசியல் சின்னங்கள், அரசியல் தலைவா்கள் பெயா்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகங்களால் மறைக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல, பல்வேறு அரசியல் தலைவா்களின் சிலைகள் துணிகளால் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் பொதுமக்கள் நீண்ட நாள்களாகப் பயணிகள் நிழல்குடை வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பேருந்துக்காக கடும் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில், பழைய ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே சிலா் கிழிந்த குடைகளின் கம்பிகளை தரையில் ஊன்றி, அதனருகே பயணிகள் நிழல்குடை என்ற பதாகையையும் வைத்துள்ளனா். இது பலரது கவனத்தையும் ஈா்த்து வருகிறது.
தொடர்புடையது

பழனி அருகே தீ விபத்தில் காா்கள் சேதம்

ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்

பழனி கோயிலில் பக்தா்கள் கூட்டம்: மின்கசிவு காரணமாக விஞ்ச் நிறுத்தம்

பழனியில் நியாய விலைக் கடைகள், பயணிகள் நிழல் குடைகள் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


