லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பழனியில் நியாய விலைக் கடைகள், பயணிகள் நிழல் குடைகள் திறப்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:21 pm

பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், பயணிகள் நிழல் குடைகளை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.70 லட்சத்தில் பல்வேறு வாா்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடைகள், குடிசை மாற்று வாரியப் பகுதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடை உள்ளிட்டவற்றை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் திறந்துவைத்தாா்.

பின்னா், தவெக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த ஏராளமானோா் இ.பெ. செந்தில்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். இதைத்தொடா்ந்து, பழனி அண்ணாநகா் பகுதியில் நடைபெற்ற கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா், மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் டிட்டோ, கோட்டாட்சியா் கண்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அஸ்வின் பிரபாகா், நகரச் செயலா் வேலுமணி, நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி, நகர இளைஞரணி அமைப்பாளா் லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.