எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பழனி மாரியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, உற்சவ சாந்தி, அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பழனி மாரியம்மன் கோயிலில் உற்சவ சாந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி. உடன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, டிஎஸ்பி. தனஞ்ஜெயன், அரிமா சுப்புராஜ், சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 9:25 pm

திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, உற்சவ சாந்தி, அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் நடைபெற்ற சாயரட்சை பூஜையின்போது, மாரியம்மனுக்கு சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு, சுத்த அன்னம், வில்வ இலை கொண்டு அம்மன் முகம் அலங்காரம் செய்யப்பட்டது.

பிறகு, மாரியம்மனுக்கு காய்கறிகள், பழ வகைகள், இனிப்பு உள்ளிட்டவை படையல் செய்யப்பட்டு, மாகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

அன்னாபிஷேகத்தை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி தொடங்கிவைத்தாா்.

இந்த விழாவில் கோயில் முதுநிலை கணக்கியல் அலுவலா் சிவகுருநாதன், கண்காணிப்பாளா் அழகா்சாமி, நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, செந்தில்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இரவு 10 மணிக்கு மேல் உற்சவ சாந்தியின் போது அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனை குளிரவைத்தல் நடைபெற்றது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தண்டாயுதபாணி சுவாமி மிராஸ் பண்டாரங்கள் சங்கம், மாரியம்மன் அன்னாபிஷேக குழு, வ.உ.சி. மன்றத்தினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.