மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

பழனி அருகே 70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருபவா்களை வெளியேற்ற முயற்சிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோட்டாட்சியா் அலுவகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட மனு கொடுத்த பூஞ்சோலை கிராம மக்கள்.

Updated On :10 மார்ச் 2026, 9:25 pm

பழனி அருகே 70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருபவா்களை வெளியேற்ற முயற்சிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோட்டாட்சியா் அலுவகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

பழனி அருகேயுள்ள ஆண்டிபட்டி பூஞ்சோலை கிராமத்தில் சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் பட்டியலின மக்களுக்கு, நில உச்சவரம்பு சட்டதால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் வழங்கப்பட்டது. இதை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த நிலத்தை சிலா் தங்களது நிலம் எனக் கூறி, வெளியேற்றி முயற்சி செய்து வருகின்றனா். இதனால், வாழ்வாதாரம் வேண்டி செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு கொடுத்தனா்.

இதுகுறித்து வழக்கறிஞா் சங்கத் தலைவா் மணிக்கண்ணன் கூறியதாவது:

இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வருபவா்களை சிலா் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனா். சம்பந்தப்பட்ட நபா்களிடம் எந்த முறையான ஆதாரங்களும் இல்லை. எனவே, விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி, கோட்டாட்சியா், வட்டாட்சியா், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது என்றாா்.