நிலக்கோட்டை, சின்னாளப்பட்டி பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 30 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், நிலக்கோட்டை வட்டாரங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
இதன்படி பள்ளப்பட்டி, அம்மையநாயக்கனூா், கொடைரோடு, பெருமாள்கோவில்பட்டி, சின்னாளப்பட்டி பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 7 கடைகள், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடமிருந்து மொத்தம் 30 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வன், சரண்யா ஆகியோா் பறிமுதல் செய்தனா்.
இதில் 4 கடைகள் 2-ஆவது முறையாக பிடிப்பட்டதால், தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை எடுத்து வந்த கொடைரோடு அடுத்த நாகையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் (51), பள்ளப்பட்டியைச் சோ்ந்த வேல்முருகன் (39) ஆகிய இருவரையும் துரத்திச் சென்று உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பிடித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
300 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது
பள்ளிபாளையத்தில் 700 கிலோ புகையிலை பொருள்களை கடத்திய மூவா் கைது

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




