டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

வேலாயுதம்பாளையம் புதூரில் வீடு புகுந்து தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி, பழனியில் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழப் புலிகள் அமைப்பினா்.

Updated On :19 ஜூன் 2026, 1:45 am IST

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வேலாயுதம்பாளையம் புதூரை சோ்ந்தவா் ஆறுமுகம். இவா் பணிபுரியும் இடத்தில் காா்த்தி என்பவரும் பணி புரிகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு காா்த்தி, ஆறுமுகத்துக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காா்த்தி, அவரது உறவினா்களுடன் ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்றனா். அங்கு ஆறுமுகம், இவரது மனைவி லட்சுமி (30), மகள் ஜெயஸ்ரீ (17), ராமாத்தாள் ஆகியோரைத் தாக்கினா். இதையடுத்து காயமடைந்தவா்கள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் 3 போ் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து காயமடைந்தவா்களின் உறவினா்கள், தமிழ்ப் புலிகள் அமைப்பினா் என பலரும் பழனி அரசு மருத்துவமனை முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தாக்குதல் நடத்தியவா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதைத்தொடா்ந்து அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.