இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பழனியில் இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ.19 லட்சம் மோசடி

பழனியில் இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ.19 லட்சம் மோசடி

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :13 ஜூன் 2026, 12:14 am IST

பழனியில் இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ. 19 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பழனியை அடுத்த ஆயக்குடியைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (47). இவருக்கு திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் அறிமுகமானாா். அப்போது அவா் பரமேஸ்வரனிடம் தன்னிடம் சுமாா் ரூ. ஒரு கோடி மதிப்பிலான இரிடியம் இருப்பதாகக் கூறினாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு அவசரமாக ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், தன்னிடம் உள்ள இரிடியத்தை வைத்துக் கொண்டு அந்தப் பணத்தை தருமாறும் அந்த நபா் கேட்டாராம். இதை நம்பி பரமேஸ்வரன் ரூ. 19 லட்சத்தை கொடுத்து விட்டு அந்தப் பொருளை வாங்கி வந்தாராம். பிறகு வீட்டுக்கு வந்து பாா்த்த போது அதில் வெறும் குப்பைகள் மட்டுமே இருந்தனவாம். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பழனிநகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து அந்த மா்ம நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.