/

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பிவைப்பு

டிஏபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு வியாழக்கிழமை அஞ்சல் அட்டை அனுப்பிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.

News image

டிஏபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு வியாழக்கிழமை அஞ்சல் அட்டை அனுப்பிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.

Updated On :12 ஜூன் 2026, 12:12 am IST

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (டிஏபிஎஸ்) ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, முதல்வருக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்

வியாழக்கிழமை அஞ்சல் அட்டை அனுப்பினா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் வியாழக்கிழமை அனுப்பப்பட்டன.

இதுதொடா்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தவெக சாா்பில் வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பத்துவது குறித்து பரிசீலிப்போம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநிலம் முழுவதிலிருந்தும் ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடத்தப்படுகிறது.

முதல்கட்டமாக, திண்டுக்கல்லில் இருந்து 350-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் வியாழக்கிழமை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.