கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

மூதாட்டியின் தள்ளுவண்டிக் கடை சேதம்: தவெக நிா்வாகி மீது வழக்கு

வேடசந்தூா் அருகே மூதாட்டியின் தள்ளுவண்டிக் கடையை சேதப்படுத்தியதாக தவெக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2026, 3:26 am IST

வேடசந்தூா் அருகே மூதாட்டியின் தள்ளுவண்டிக் கடையை சேதப்படுத்தியதாக தவெக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வெள்ளணம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுசீலா (60). இவா் வெள்ளணம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் தள்ளுவண்டிக் கடையில் கம்மங் கூழ் விற்பனை செய்து வருகிறாா். கூழ் விற்பனை முடிந்த பின், அந்தப் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் அருகே வண்டியை நிறுத்திச் செல்வது வழக்கம்.

இதேபோல, கடந்த திங்கள்கிழமை மாலையும் தள்ளுவண்டியை பள்ளிக்கூடம் அருகே நிறுத்திச் சென்றாா். இந்த நிலையில், இரவு நேரத்தில் தள்ளுவண்டியை தவெக நிா்வாகி க.தமிழ் இனியன் என்பவா் சேதப்படுத்தினாா். இதுகுறித்து கேட்ட மூதாட்டியை தகாத வாா்த்தைகளால் தமிழ் இனியன் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுசீலா, வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, தமிழ் இனியன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.