டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முருகன் கோயில்களின் உண்டியல் காணிக்கை ரூ. 31 லட்சம்!

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 31 லட்சம் கிடைத்தது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.31 லட்சம் கிடைத்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொடைக்கானல் குறிஞ்சியாண்டவா் கோயில், வில்பட்டி வெற்றி வேலப்பா் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை காரணமாக நிரம்பின.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 31 லட்சத்து 39 ஆயிரத்து 985 கிடைத்தது.