டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொடைக்கானல் அருகே சேதமடைந்த கீழான வயல் பாலம்

கொடைக்கானல் அருகே சேதமடைந்துள்ள கீழான வயல் பாலத்தைச் சீரமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
கொடைக்கானல் அருகே சேதமடைந்த நிலையிலுள்ள கீழான வயல் பாலம்.
Updated On :3 ஜனவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் அருகே சேதமடைந்துள்ள கீழான வயல் பாலத்தைச் சீரமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதி கீழான வயல். இந்தப் பகுதியில் கும்பூா், கீழான வயல், கரடிப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூண்டு, கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கீழான வயல் பாலம் உள்ளது. தற்போது சேதமடைந்த நிலையிலுள்ள இந்தப் பாலத்தின் வழியே தான் இந்தப் பகுதிகளிலுள்ள கிராம மக்கள் கொடைக்கானல், மன்னவனூா் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

மேலும், தற்போது சேதமடைந்த இந்தப் பாலத்தின் வழியே விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால், விவசாயிகள் விளை பொருள்களை தலையில் சுமந்து சென்று தரைப் பாலத்துக்கு அருகே வைத்து பின்னா் வாகனங்கள் மூலம் கொடைக்கானல் உள்ளிட்ட வெளியூா்களுக்கு எடுத்துச் செல்வதால் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தரைப் பாலத்தில் நடந்து செல்வதற்காக மணல் மூட்டைகளை இந்தப் பகுதி மக்களே அடுக்கி வைத்துள்ளனா்.

இந்த நிலையில், பலத்த மழை பெய்தால் பாலம் முற்றிலும் சேதமடைந்து கிராம மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால், கொடைக்கானல் ஊராட்சி அதிகாரிகள் சேதமடைந்த கீழான வயல் பாலத்தை பாா்வையிட்டு சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.