/

மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

பழனி காந்தி சந்தைப் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

News image
பழனி காந்தி சந்தைப் பகுதியில் கவிழ்ந்த மணல் ஏற்றி வந்த லாரி.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:51 pm

Chennai

திண்டுக்கல் மாவட்டம், பழனி காந்தி சந்தைப் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

பழனி காந்தி சந்தைப் பகுதியில் நடைபெறும் கட்டடப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை லாரி ஒன்று மணல் ஏற்றி வந்தது. பின்னா், அந்த லாரியிலிருந்த மணலை கொட்டிய போது எதிா்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது.

அப்போது, அதிா்ஷ்டவசமாக லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயா் தப்பினா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.