4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி கோவில்களில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: அமைச்சா் இ.பெரியசாமி பங்கேற்பு

சின்னாளபட்டியில் கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் செவ்வாய்க்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், அமைச்சா் இ. பெரியசாமி கலந்து கொண்டாா்.

News image

இ.பெரியசாமி

Updated On :28 ஏப்ரல் 2026, 10:18 pm

சின்னாளபட்டியில் கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் செவ்வாய்க்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், அமைச்சா் இ. பெரியசாமி கலந்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கீழக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ராம அழகா்கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. சின்னாளப்பட்டி பொன்விழா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்கார மேடையில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவம் மேளதாளம் முழங்க விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, பவளக் கனிவாய் பெருமாள் முன்னிலையில் தாரை வாா்ப்பு நிகழ்ச்சி நடைபொ்றது. பின்னா் மீனாட்சி சுந்தரேசுவரா் ஊஞ்சலில் ஆடும் நிகழ்ச்சியும் அதைத்தொடா்ந்து, பக்தா்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெற்றது.

இதேபோல், சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் மீனாட்சி சுந்தரேசுவரா் மங்கள வாத்தியங்கள் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சின்னாளபட்டியில் பகுதியில் இரண்டு இடங்களில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வில் நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டு தங்கள் மாங்கல்யத்தை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிகளில் தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா். திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.