மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லி விட்டாா்! - டி.டி.வி. தினகரன்

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லிவிட்டதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்...

News image

டி.டி.வி. தினகரன் - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:08 pm

தமிழகத்தில் போதை, பாலியல் தொல்லை மட்டுமே உள்ளதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லிவிட்டதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கஞ்சா, பாலியல் தொல்லை மட்டுமே உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைப் பேசிவிட்டாா். தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள் புழக்கத்தால் மாணவா்கள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டி என்பது ஆளும் மக்கள் விரோத திமுக கூட்டணிக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான். மற்ற கட்சிகள் தங்களை மாற்று எனச் சொல்லிக் கொள்கிறாா்கள். ஆனால், அதிமுக தொண்டா்கள் ஓரணியில் இணைந்துவிட்டதால், எங்கள் கூட்டணிக்கு மற்ற புதிய கட்சிகளால் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றாா் அவா்.