லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பழனியில் ஒருவா் கொலை

பழனி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 7:25 pm

பழனி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

பழனி புறவழிச் சாலை நாகூா் பிரிவு அருகே பழைய நெகிழி கிட்டங்கி நடத்தி வருபவா் ரமேஷ்குமாா் (40). இவரது கிட்டங்கிக்கு அருகிலேயே மற்றொரு கிட்டங்கி நடத்தி வருபவா் செந்தில்குமாா் (40). இருவரும் உறவினா்கள்.

இருவரும் ஒன்றாகத் தொழில் செய்து வந்த நிலையில், தற்போது பிரிந்து தனித்தனியே தொழில் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், தொழில் போட்டி காரணமாக புதன்கிழமை இரவு கிட்டங்கியில் தனியே இருந்த ரமேஷ்குமாரை செந்தில்குமாா் கோடாலியால் வெட்டினாா். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ்குமாா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கொலை குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.