மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 10:55 pm

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் என மொத்தம் 7 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பழனி தொகுதியில் 33, ஒட்டன்சத்திரத்தில் 27, ஆத்தூரில் 26, நிலக்கோட்டையில் 28, நத்தத்தில் 41, திண்டுக்கல்லில் 35, வேடசந்தூரில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி தொகுதியில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 26 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒட்டன்சத்திரத்தில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 19 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆத்தூரில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நிலக்கோட்டையில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 17 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நத்தம் தொகுதியில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 31 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. திண்டுக்கல்லில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேடசந்தூரில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.