திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் என மொத்தம் 7 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பழனி தொகுதியில் 33, ஒட்டன்சத்திரத்தில் 27, ஆத்தூரில் 26, நிலக்கோட்டையில் 28, நத்தத்தில் 41, திண்டுக்கல்லில் 35, வேடசந்தூரில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனி தொகுதியில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 26 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒட்டன்சத்திரத்தில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 19 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆத்தூரில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நிலக்கோட்டையில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 17 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நத்தம் தொகுதியில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 31 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. திண்டுக்கல்லில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேடசந்தூரில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தொடர்புடையது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 126 வேட்புமனுக்கள் ஏற்பு: 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி
வேட்புமனு பரிசீலனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 121 மனுக்கள் ஏற்பு, 67 மனுக்கள் தள்ளுபடி
திருப்பத்தூா்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 83 மனுக்கள் ஏற்பு; 47 மனுக்கள் நிராகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

