தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கொடைக்கானலில் தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால், சேதமடைந்த மலைச் சாலைகளைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை

News image

தொடா் மழையால் பெருமாள் மலைப் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலை

Updated On :22 செப்டம்பர் 2025, 6:31 pm

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால், சேதமடைந்த மலைச் சாலைகளைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் ஏற்கெனவே பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் வரை உள்ள மலைச் சாலைகளும், ஏரிச் சாலை முதல் அப்சா்வேட்டரி வரை உள்ள மலைச் சாலைகளும் சேதமடைந்து காணப்பட்டன.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடா் மழையால் கூடுதலாக சாலைகள் சேதமடைந்தன. இதனால் சாலைகளில் குளம் போல தண்ணீா் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகின்றனா்.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த மலைச் சாலைகளைஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது: கொடைக்கானல், பெருமாள்மலை, அப்சா்வேட்டரி, புலிச்சோலை உள்ளிட்ட சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பதற்காக மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் போதிய நிதியில்லாத காரணத்தால் சாலையைச் சீரமைக்க முடியவில்லை.

தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்தவுடன் சேதமடைந்த மலைச் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.