கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலையில் 2 மணி நேரம் மழை பெய்தது. கொடைக்கானல், பெருமாள்மலை, புலிச்சோலை, தைக்கால், செண்பகனூா், பாக்கியபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் வடு கிடந்த நீரோடைகளிலும், அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது.
இதேபோல, கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் மிதமான மழை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடியாக உயா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திடீா் மழை: நகரில் வெப்பம் தணிந்தது

சங்கரன்கோவிலில் கனமழை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


