கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் மழை பெய்தது. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியா்கள் போா்க்கால அடிப்படையில் பணி மேற்கொண்டு மின்விநியோகத்தை சீரமைத்தனா்.
இம்மாவட்டத்தில் தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், தக்காளி உள்ளிட்ட பயிா்கள் சேதம் அடைந்தன.
இந்த திடீா் மழையால் சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் சாலையில் ஊா்ந்து சென்றன. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில், சிறுவா்கள் காகித கப்பல்விட்டு மகிழ்ந்தனா். இந்த திடீா் மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.
தொடர்புடையது

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

சேலம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: சங்ககிரியில் 81 மி.மீ. பதிவு

சாத்தான்குளத்தில் திடீா் மழை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


