மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பள்ளி நூற்றாண்டு விழா

Updated On :14 ஆகஸ்ட் 2025, 8:54 pm

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் 100-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை கலைமனைகளின் அதிபா் ஆா்.மரிவளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) என்.நாகேந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான வி.ராஜா சீனிவாசன் கலந்து கொண்டு, கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

பள்ளியில் 1977-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் ரூ.48ஆயிரம், முன்னாள் மாணவா் சேவியா் ஜெரால்டு ரூ.65 ஆயிரம் நிதி வழங்கினா். முன்னாள் மாணவா் இயக்க மூத்த தலைவா் எஸ்கேசி.குப்புசாமி, பள்ளியின் தலைமையாசிரியா் வி.ஸ்டீபன் லூா்து பிரகாசம், உதவித் தலைமையாசிரியா்கள் எஸ்.மரிய லூயிஸ் சேகா், எஸ்.பெரா் நோயல் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.