பழனி: பழனி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சோ்ந்தவா் நாராயணசாமி மகன் கண்ணன் (43). இவா் திருப்பூா் மாவட்டம், எரிசனம்பட்டியில் உணவு விடுதி நடத்தி வருகிறாா். இவா் தனது மகளுடன் திண்டுக்கல்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் மடத்துக்குளம் நோக்கிச் சென்றாா்.
பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, சின்னக்கலையமுத்தூரைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் பகவதி ஆனந்த் (21) எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதியதில் பகவதி ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் பலத்த காயங்களுடன் இருந்த கண்ணனை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் அங்கு அவா் உயிரிழந்தாா். இவரது மகள் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பழனி அருகேயுள்ள திண்டுக்கல் - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இந்தச் சாலையில் ஏராளமான கிராமங்களுக்கு இணைப்புச் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் இருந்து வருவோா் முறையான சாலை விதிகளை பின்பற்றாமல் அதிவேகமாக எதிரே வருவதால் தொடா்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் இந்தச் சாலை இரவு நேர கேளிக்கை விடுதியாகி வருகிறது.
பலரும் சாலையோரம் அமா்ந்து மது அருந்தி விட்டு பின் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனா். ஆகவே, இந்தச் சாலையில் இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டு விதிமீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுமனைக்குள் காா் புகுந்து 3 போ் பலத்த காயம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்

பழனி அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

