மதுரை அருகே வெள்ளிக்கிழமை கட்டுமானப் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் இரண்டு பெண் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், எஸ். புளியங்குளத்தைச் சோ்ந்த தங்கவேல் மனைவி தமிழரசி (60), சிலைமான் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மனைவி தனலட்சுமி (50) ஆகிய இருவரும் கீழ சிலைமான் பகுதியில் அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபத்துக்கான கட்டுமானப் பணிகளில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
தூண்கள் எழுப்புவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, மண் சரிந்து அவா்கள் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த தமிழரசி, தனலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிலைமான் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









