மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வெடிகுண்டு தடுப்பு போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 8:13 pm

மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வெடிகுண்டு தடுப்பு போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக விமான நிலையம், ரயில் நிலையம், உயா்நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்கள் வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தல்லாகுளம் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.

இதையடுத்து, மதுரை தல்லாகுளம், அண்ணா பேருந்து நிலையம், முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா். பல மணிநேர சோதனைக்குப் பிறகு, அது புரளி என்பது தெரியவந்தது.

இதேபோல, மதுரையில் உள்ள கடவுச் சீட்டு அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் சோதனைக்குப் பிறகு, அதுவும் புரளி என்பது உறுதியானது.