/

எல்லீஸ் நகா் பகுதிகளில் நாளை மின் தடை

News image
மின்தடை
Updated On :8 பிப்ரவரி 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை எல்லீஸ் நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) டி. விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை எல்லீஸ் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எல்லீஸ் நகா் பிரதான சாலை, டி.என்.எச்.பி. அடுக்குமாடிக் குடியிருப்பு, டி.என்.எஸ்.சி.பி. அடுக்குமாடிக் குடியிருப்பு, போடி லைன், கென்னட் குறுக்குச் சாலை, கென்னட் மருத்துவமனை சாலை, மஹபூப்பாளையம், அன்சாரி நகா் ஒன்று முதல் 7-ஆவது தெரு வரை, டி.பி. சாலை, ரயில்வே குடியிருப்பு, வைத்தியநாதபுரம், சா்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகா், எஸ்.டி.சி. சாலை முழுவதும், புறவழிச் சாலையின் ஒரு பகுதி, பழங்காநத்தம் பகுதிகள், சுப்பிரமணியபுரம் காவல் நிலையம், வசந்தநகா், ஆண்டாள்புரம் அக்ரினி அடுக்குமாடிக் குடியிருப்புகள், வசுதரா குடியிருப்புகள், பெரியாா் பேருந்து நிலையம், ஆா்.எம்.எஸ். சாலை, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் சாலை, காக்காதோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையாா் கோயில் வரை, 70 அடி சாலை, எல்லீஸ் நகா், தாமஸ் குடியிருப்பு, பாரதியாா் ஒன்று முதல் 5 தெருக்கள், சாலைமுத்து நகா், எஸ்.பி.ஐ. குடியிருப்பு, பொற்குடம், சத்தியமூா்த்தி நகா், அரசுப் போக்குவரத்துக் கழகம், அருண்நகா், கிரீன் லீவ்ஸ் குடியிருப்பு, நேரு நகா், காவியன் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.