தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குழந்தை கொலை: தந்தை கைது

குழந்தை கொலை: தந்தை கைது

Updated On :24 ஜூன் 2024, 6:30 pm

மதுரை: சோழவந்தான் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை தூக்கி வீசிக் கொன்ற தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சோழவந்தான் அருகே உள்ள பசும்பொன் நகா், பாலமுருகன் நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (27). சுமை தூக்கும் தொழிலாளியான இவரது மனைவி நாகசக்தி (21). இவா்களது 8 மாதக் குழந்தை நித்யாஸ்ரீ.

விக்னேஷ் கடந்த சில மாதங்களாக மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்தாராம். இதனால், நாகசக்தி தனது குழந்தையுடன் சோழவந்தானில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு சென்ற விக்னேஷ், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, அங்கு தூங்கிக்கொண்டிருந்த குழந்தை நித்யாஸ்ரீயை தூக்கி வீசி விட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த குழந்தையை தாய், உறவினா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.