கோட்டூர்- கூழையனூர் முல்லையாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதால் துரைச்சாமிபுரம், அய்யநாதபுரம், குச்சனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும், வருஷநாடு, தர்மாபுரி, தப்புக்குண்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பயனடைவர். ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கடந்த 2011, ஏப்ரல் மாதம் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இணைப்புப் பாலம் மற்றும் சாலை அமைப்பதாக அறிவித்து, பூமி பூஜை நடைபெற்றது. தற்போது வரை திட்டப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அடித்தள கட்டுமானப் பணிகளுக்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த பொருள்களும் சில மாதங்களுக்கு முன் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.