நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டும் நிறுத்தாமல், பல இடங்களில் மினி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வது, 4-க்கும் மேற்பட்ட மினி பஸ்களை, ஓரே இடத்தில் நிறுத்தி வைத்து சாலையை ஆக்கிரமித்துக் கொள்வது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த கம்பம் நெடுஞ்சாலை கொட்டகுடி பாலம் முன்பு, மினி பஸ்களை திருப்பி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பது, நேர நிர்ணயமின்றி சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்தி வைத்து சரக்குகளை ஏற்றி இறக்குவது, கட்டுப்பாடு இல்லாத ஆட்டோக்களின் இயக்கம் ஆகியவற்றால் போக்குவரத்து குளறுபடி மற்றும் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.