தேனிக்கு குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மூலமும், பழனிசெட்டிபட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலமும், வீரப்பஅய்யனார்கோயில் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர்த் திட்டங்கள் மூலம் பம்பிங் செய்யப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லாததால், குடிநீர் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டு, அனைத்து பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுள்ளது. மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது உறைகிணறுகள் தண்ணீரில் மூழ்கி விடுவதாலும், குழாய்கள் துண்டிக்கப்பட்டு விடுவதாலும், குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. தாற்காலிகப் பணிகளுக்காக நகராட்சி நிதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3 கோடி வரை செலவிட்டும், குடிநீர்க் குழாய்களில் 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.