மாநகர காவல் துறை ஆணையரான கண்ணப்பன், நேர்மைக்கும், கடமைக்கும் பெயர் பெற்றவர். அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாதவர். சி.பி.ஐ.யில் எஸ்.பி.யாகப் பணியாற்றியவர். மாவட்ட ஆட்சியர் சகாயம், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, தனது சொத்துக் கணக்கை பகிரங்கமாக அறிவித்து, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தவர். நேர்மையானவர் எனப் பெயரெடுத்தவர். அதிரடி நடவடிக்கையாளர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அஸ்ரா கர்க், சாதி மோதல்களுக்கும், அரசியல் அதிகார மையங்களின் போட்டிக்கும் பெயர் பெற்ற திருநெல்வேலியில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல், நேர்மையாகச் செயல்பட்டவர்.