தேனி மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு 1,063 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இப் பயனாளிகளுக்கு அரசு தலா ரூ. 75 ஆயிரம் மானியம் வழங்கும் என்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மாறுபட்ட வட்டி விகிதக் கடன் (டி.ஆர்.ஐ. கடன்) வழங்கப்படும் என்றும், கடன் தொகையை 5 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது. தற்போது 605 வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வங்கிக் கடன் கிடைக்காததால் மற்ற பயனாளிகள் வீடு கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.