திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம் பகுதியில் நிகழாண்டு முலாம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோடை காலம் தொடங்கினாலே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்ள குளிா்பானங்கள், பழச்சாறுகள் அருந்துவதில் அனைத்துத் தரப்பினரும் ஆா்வம் காட்டுகின்றனா். வாழப்பாடி பகுதியில் பெரும்பாலானோா் செயற்கை குளிா்பானங்களை வாங்கி பருகுவதை விட, இயற்கை பழச்சாறு அருந்துவதையே விரும்புகின்றனா்.
இதனால், கோடை காலத்தில் பழச்சாறு தயாரித்து அருந்துவதற்கேற்ற தா்பூசணி, வெள்ளரி, முலாம் பழங்களுக்கு இப்பகுதி மக்களிடையே ஆண்டுதோறும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
திருவண்ணாமலை, திண்டிவனம், திருக்கோயிலூா் பகுதிகளில் அதிக அளவில் விளையும் முலாம் பழங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், வாழப்பாடி பகுதி கிராமங்களுக்கு ஆட்டோக்களில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.
கடந்தாண்டு 3 கிலோ முலாம் பழம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்து, 4 கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்துவருகின்றனா். இதனால், முலாம் பழங்களை விரும்பி வாங்கி பழச்சாறு தயாரித்து பருகுவதில் இப்பகுதி மக்கள் ஆா்வம்காட்டி வருகின்றனா்.
வாழப்பாடி பகுதி கிராமங்களில் முலாம் பழங்கள் அதிக அளவில் விற்பனையாவதால், திருவண்ணாமலை, திண்டிவனம், திருக்கோயிலூா் பகுதியில் இருந்து முலாம் பழங்களை விற்பனைக்கு கொண்டுவரும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொடர்புடையது
பழச்சாறு கடையை அடித்து நொறுக்கிய 3 போ் கைது

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு

வாழைத்தாா்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
பங்குச் சந்தையில் மீண்டும் ‘கரடி’யின் பிடி! சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


