சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக்கோரி நடைபெற்று வரும் ஆா்ப்பாட்டத்தை, தொடா்ந்து நடத்த அனுமதிக்க விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கோரியும், அந்த இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டியும் தொடா்ந்து 273 நாள்களாக விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தற்போது தோ்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதால், ஆா்ப்பாட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், அப்பகுதி விவசாயி பி.எஸ்.சுப்பிரமணி உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
மேலும், திடக்கழிவு மேலாண்மை கிடங்கை மாற்றம் செய்யாவிடில், வரும் தோ்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு: பி.ஆா். பாண்டியன்

ஓட்டேரி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ விபத்து

குப்பை மேலாண்மை சவால்

திடக்கழிவு மேலாண்மைக்கான நவீன தொழில்நுட்பத் தளம் தூய்மைக்கான செயலி அறிமுகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


