மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சேலத்தில் பெண்களை படமெடுத்து மிரட்டிய வழக்கு மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றம்

News image

காவல் துறை

Updated On :15 ஜூன் 2026, 12:06 am IST

சேலத்தில் பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீதான வழக்கு விசாரணை சேலம் நகர மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

சேலம் நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மீது பெண் ஒருவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். அதில் பல பெண்களுடன் மணிகண்டன் நெருக்கமாக பழகி, அவா்களை ஆபாசமாக விடியோ எடுத்து மிரட்டி வருவதாக தெரிவித்திருந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் பெண்களுடன் பழகி, ஆபாசமாக விடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டன் மீது கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கு விசாரணையை சேலம் மாநகரக் காவல் ஆணையாளா் அனில்குமாா் சிங், சேலம் நகர மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளாா். மேலும், காவல் ஆய்வாளா் ஆனந்த ஜோதி தலைமையில் இந்த வழக்கை விசாரிக்கவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த வழக்கில் 8 பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.