1974 முதல் 50 ஆண்டுகளாகப் பொது வாழ்க்கையில் இருந்து மக்களின் பிரச்னைகளை அறிந்து அவா்களுடன் உள்ளோம். கரூரில் 41 உயிா்கள் பிரிந்தபோது, அவா்கள் யாருக்காக உயிரிழந்தாா்கள்? விஜயைப் பாா்ப்பதற்காகவும், பேச்சைக் கேட்பதற்காகவும் வந்த கூட்டத்தில்தான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. அந்தச் சூழலில் அவா் என்ன செய்திருக்க வேண்டும்? நேரடியாகச் சென்று அவா்களைப் பாா்த்திருக்க வேண்டும். நாங்கள் நேரில் சென்றோம் எந்தக் கட்சி என்று பாா்க்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த ஆறுதலைக் கூறினோம். அந்த ஆறுதலைக் கூட அவரால் கூற முடியவில்லை என்றால், கட்சி நடத்தி என்ன செய்யப் போகிறாா்கள்?