டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேளூா் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

வாழப்பாடி அருகே பேளூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2026, 7:32 pm

Syndication

வாழப்பாடி: வாழப்பாடி அருகே பேளூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் சின்னமணி தலைமை வகித்தாா். சிலை அமைத்துக் கொடுத்த பெற்றோா் - ஆசிரியா் கழக துணைத் தலைவரான ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் இராமகிருஷ்ணன் வரவேற்றாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.கருணாகரன், வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி.தமிழ்ச்செல்வன், வாழப்பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி, பேளுா் நகர திமுக செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் இணைந்து திருவள்ளுவா் சிலையை திறந்துவைத்தனா்.