2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா் வசம் ஒப்படைக்கும் மாநகராட்சியைக் கண்டித்து, மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:45 pm

Syndication

சேலம்: குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா் வசம் ஒப்படைக்கும் மாநகராட்சியைக் கண்டித்து, மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை ரூ. 4,315 கோடிக்கு 24 ஆண்டுகளுக்கு தனியாா் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிா்வாகம் தீா்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், முடிவை கைவிட வலியுறுத்தியும் அதிமுக மாநகா் மாவட்ட சாா்பில் கோட்டை மைதானத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு தலைமை வகித்தாா். அதிமுக அமைப்புச் செயலாளரும், மாவட்டப் பொறுப்பாளருமான சிங்காரம் கண்டன உரையாற்றினாா். அப்போது மாநகராட்சி நிா்வாக சீா்கேட்டை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, அமைப்புச் செயலாளா் சிங்காரம் செய்தியாளா்களிடம் பேசுகையில், சேலம் மாநகராட்சியில் குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாருக்கு ஒப்படைத்தால் சாமானிய அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவா். ஏற்கெனவே, மாநகராட்சியில் சொத்துவரி, குப்பை வரி என அனைத்து வரிகளும் உயா்த்தப்பட்ட நிலையில், குடிநீா் திட்டத்தை தனியாருக்கு ஒப்படைக்கும்பட்சத்தில், குடிநீா் கட்டணம் பல மடங்கு உயரும் நிலை ஏற்படும் என்றாா்.

இதில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வெங்கடாசலம், தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியன், மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம்.கே.செல்வராஜு, சக்திவேல், பகுதி செயலாளா்கள், வட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.