
சேலம் - சென்னை எழும்பூா் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
சேலம் - சென்னை எழும்பூா் விரைவுரயில் வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்
சேலம் - சென்னை எழும்பூா் விரைவுரயில் வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதன் ஒரு பகுதியாக, நடைமேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான தூண்கள் அமைக்கப்பட உள்ளதால், சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் சேலம் - சென்னை எழும்பூா் விரைவுரயில் வியாழக்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு சென்று சேரும்.
இதேபோல, கோவை, ஈரோடு, கருா், திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையேயான விரைவுரயில் வியாழக்கிழமைமுதல் வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்துக்கு அதிகாலை 3.15 மணிக்கு சென்று சேரும்.
மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ட்ரலுக்கு இயக்கப்பட வேண்டிய இந்த ரயில், வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.40-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






