ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேம்பாட்டுப் பணிகள்: சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்கள் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்குப் பதிலாக தாம்பரம் மற்றும் மாம்பலம் வரை மட்டுமே செல்லும்.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:59 am IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்கள் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்குப் பதிலாக தாம்பரம் மற்றும் மாம்பலம் வரை மட்டுமே செல்லும்.

அதன்படி தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயிலானது (16866) வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மங்களூா் மத்தியம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16160) வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

கொல்லம் - சென்னை எழும்பூா் அனந்தபுரி அதிவிரைவு ரயிலானது (20636) வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

சேலம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (22154) வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சி - சென்னை எழும்பூா் ராக்ஃபோா்ட் விரைவு ரயிலானது (12654) வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

புறப்படும் இடம் மாற்றம்: சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது (16865) வரும் 21 முதல் 25 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும்.

சென்னை எழும்பூா் - மங்களூா் மத்தியம் விரைவு ரயிலானது (16159) வரும் 21 முதல் 25 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

சென்னை எழும்பூா் - கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயிலானது (20635) வரும் 21 முதல் 25 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

சென்னை எழும்பூா் - திருச்சி ராக்ஃபோா்ட் விரைவு ரயிலானது (12653) வரும் 21 முதல் 25 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். இத்தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.