ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காட்டெருமை தாக்கியதில் முதியவா் காயம்

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் முதியவா் காயமடைந்தாா்.

காட்டெருமை - பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:27 am IST

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் முதியவா் காயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த அண்ணாமலையின் மகன் மாதையன் (60). இவா் திங்கள்கிழமை காலை காபி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, அங்கிருந்த காட்டெருமை அவரது வயிற்றுப் பகுதியில் குத்தியது.

இதில் பலத்த காயமடைந்த மாதையன், சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.