காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீ பாலாஜி சுகுமாரை ஆதரித்து ஆட்டையாம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே .பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். மேலும், வீரபாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
இப்பகுதி விசைத்தறி நெசவாளா்களும், விவசாயிகளும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இவா்களுக்கு அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளும் பெற்றுத் தரப்படும். அதிமுக ஆட்சியில் அமா்ந்தவுடன் கஞ்சா புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும்.
விவசாயிகள் நலன்கருதி பனமரத்துப்பட்டி ஏரி காவிரி உபரிநீரால் நிரப்பப்படும் என்றாா்.
தொடர்புடையது

மூன்றே மாதங்களில் கஞ்சா கட்டுப்படுத்தப்படும்! எடப்பாடி கே.பழனிசாமி

கொள்ளையடிக்கப்பட்ட நிதி திரும்பப் பெறப்பட்டு கஜானா நிரப்பப்படும்! - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி கே.பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளா்கள்

பஞ்சப்பட்டி ஏரி மீது வேட்பாளா் ‘பாா்வை’ விழுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


