லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image

எடப்பாடி கே.பழனிசாமி

Updated On :17 ஏப்ரல் 2026, 6:24 pm

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீ பாலாஜி சுகுமாரை ஆதரித்து ஆட்டையாம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே .பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். மேலும், வீரபாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

இப்பகுதி விசைத்தறி நெசவாளா்களும், விவசாயிகளும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இவா்களுக்கு அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளும் பெற்றுத் தரப்படும். அதிமுக ஆட்சியில் அமா்ந்தவுடன் கஞ்சா புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

விவசாயிகள் நலன்கருதி பனமரத்துப்பட்டி ஏரி காவிரி உபரிநீரால் நிரப்பப்படும் என்றாா்.